ராஜபக்ச ஆட்சியை விரட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது!
ராஜபக்ச ஆட்சியை விரட்டுவதற்கான நேரம் வந்துவிட்டதாக , ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
மக்கள் சக்திமூலம் அதனை செய்யலாம் எனவும் , அதற்கான அரசியல் தலைமைத்துவத்தை நாம் வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று நடைபெற்ற அரச எதிர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாட்டை சீரழித்துள்ள இந்த ஆட்சியாளர்களுடன் எமக்கென்ன பேச்சு, சர்வக்கட்சி மாநாட்டுக்கு நாம் சென்றிருந்தால்கூட, ‘கோட்டா வீட்டுக்கு செல்லுங்கள்’ என்றுதான் கூறியிருப்போம்.
நாட்டு மக்களும் அரசை வீட்டுக்கு செல்லுமாறு வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். தேர்தலுககு இன்னும் காலம் உள்ளது. எனினும், மக்கள் சக்தி மூலம் அரசை வீட்டுக்கு அனுப்பலாம் என்றும் அநுர கூறினார்.