கொழும்பு பகுதியில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்!
கொழும்பு, ஒருகொடவத்த மேம்பாலத்துக்கு அருகில் நபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகமூடி அணிந்து சொகுசு கார் ஒன்றில் வந்த இருவரால் குறித்த நபர் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் நேற்று (25-07-2022) இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த மீதொட்டமுல்லை பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபர், தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளதுடன், அவருக்கு எதிராக இரண்டு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.