கொழும்பில் அதிர்ச்சி சம்பவம்: துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு - தலங்கம, ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் கோரம்பே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் இன்றைய தினம் (25-08-2023) காலை தலங்கம, ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவரும் அவருடைய நண்பர்களும் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.