கொழும்பில் இரு தமிழ் இளைஞர்களுக்கு நேர்ந்த சோக சம்பவம்!
கொழும்பில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் தமிழ் இளைஞர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றிரவு (20-07-2023) 7.30 மணியளவில் கொழும்பு - கொலன்னாவை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் தமிழ் உறவினர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் வத்தளையைச் சேர்ந்த 26 வயதுடைய அன்ரனி மரியநாயகம், அவரது மைத்துனரான 22 வயதுடைய தேவதாஸ் கனிஸ்ரன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
பாரவூர்தியின் சாரதியைக் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.