கொழும்பு தீவிபத்து ; கடைசி உயிரும் பறிபோனது
கொழும்பு- ஹோமாகம மாகம்மன பிரதேசத்தில் கடந்த 25 ஆம் திகதி இரவு இரண்டு மாடி வீடொன்றின் கீழ்த்தளத்தில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்ச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லேடி ரிட்ச்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு வயதுடைய ரிதுஷி ரணசிங்க என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீவிபத்து இடம்பெற்ற போது சிறுமியின் தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் அறைக்குள் இருந்த நிலையில், , அவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் சிறுமியின் தந்தை உயிரிழந்ததுடன் தாய் மறுநாளும் மற்றும் மூத்த சகோதரி சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகும் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த ஆறு வயது சிறுமி லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை வீட்டில் கொள்கலன் ஒன்றில் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினால் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.