கொழும்பு சென்ற பேருந்து கோர விபத்து; பலர் மருத்துவமனையில் அனுமதி
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று வெல்லம்பிட்டி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் மிதொடமுல்ல சந்திக்கும் இடையிலான வீதியோரத்தில் அமைந்துள்ள ஒரு வன்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று லொறிகள் இரவு நேரத்தில் குறித்த நிறுவனத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று (11) காலை அதிவேகமாக வந்த பேருந்து, லொறியுடன் மோதியுள்ளது. இதனையடுத்து நிறுத்தப்பட்டிருந்த ஏனைய லொறிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி நான்கு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.