புலிகளின் கனவுக்கு உயிரூட்ட கூட்டமைப்பு முயற்சி
புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். சர்வக்கட்சி மாநாட்டில் கூட்டமைப்பு பங்கேற்றதில் உள்நோக்கம் இருக்கின்றது. தற்போதைய நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி தமது இலக்கை அடைவதற்கு கூட்டமைப்பினர் முற்படுகின்றதாகவும் அவர் கூறினார்.
அதாவது புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல்போனதை, அரசியல் ஆயுதம் மூலம் பெற முற்படுகின்றதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார் .
அதேவேளை அனுமான் இலங்கையை தீயிட்டு அழித்தது போல அசிங்கமான அமெரிக்கரும் தற்போது நாட்டை அழித்துவருகின்றார் என்றும், அரசுக்கான பெரும்பான்மையை இல்லாது செய்தால் அவர் அமெரிக்கா ஓடிவிடுவார் எனவும் உதய கம்மன்பில இதன்போது தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.