யாழில் திடிரென உருவான அசாதாரண நிலை ; அடியோடு அழிந்த வாழை மரங்கள்
யாழில் நேற்று நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று திடீரென யாழ்ப்பாணத்தின் கனமழை பெய்தது. கனமழையுடன் பலத்த காற்றும் யாழை சுழற்றியடித்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததுடன் இடிமின்னலும் ஏற்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பலத்த காற்றுடனான கனமழையால் யாழின் பல பகுதிகளில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் யாழ்.நவக்கிரிப் பகுதியில் மின்னல் தாக்கியதில் 52 வாழை மரங்களும் அடியோடு அழிவடைந்துள்ளதாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.