யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே மோதல்
யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கைக்கலப்பில் மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களுக்கும் இடையே முரண்பாடு
முகாமைத்துவ மாணவர்களின் நிகழ்வொன்று கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மைதானத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
அதனை அங்கிருந்த விரிவுரையாளர்கள் அவதானித்து இரு மாணவர்கள் குழுக்களையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று சனிக்கிழமை மாலை மீண்டும் இரு மாணவர் குழுக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கைக்கலப்பு ஏற்பட்டது அதில் மூன்றாம் வருட மாணவன் மீது இரண்டாம் வருட மாணவன் தனது கையில் அணிந்திருந்த உலோக காப்பினை கழட்டி தாக்கியதில் மாணவன் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக முகாமைத்துவ பீடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.