கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் மோதல்; இளைஞர் உயிரிழப்பு
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இடம்பெற்ற விருந்தின் போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
சுமார் 25 வயதுடைய இளைஞனின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துறைமுக நகர வளாகத்தில் நேற்று (17) சிலரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தின் போது இடம்பெற்ற தாக்குதலில் குறித்த இளைஞன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று (18) அதிகாலை அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.