நள்ளிரவில் வீடுபுகுந்து சுன்னாகம் பொலிஸார் அட்டூழியம் ; கண்ணீர்விடும் கர்ப்பிணிப் பெண்!
யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தனது கணவர் கொடூரமான தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாக்குதலுக்குள்ளனவரின் மண்னவு கூறியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
துப்பாக்கியை காட்டு அச்சுறுத்து
சுன்னாகம் பகுதியில் தாங்கள் வசித்துவருவதாகவும், கடந்த 28 ஆம் திகதி இரவு 11 மணியளவில் சுன்னாம் பொலிஸார் திருடர்கள் போல் மதில் ஏறி பாய்ந்து தமது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சப்பாத்து கால்கலால் கதவுகளை உதைந்து கணவரை அழைத்தனர்.

யாழ் மருத்துவர்களின் மற்றுமொரு மனித நேயமற்ற செயல் ; புற்றுநோய் சிகிச்சைக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த அவலம் !
இதனையடுத்து கணவன் அங்கு சென்றபோது அவரின் கன்னத்தில் அடித்து துப்பாக்கி காட்டி மிரட்டி சப்பாத்து கால்களால் தாக்கினார்கள்.
கணவனை அடிக்கின்றீர்கள் என நான் கேட்டபோது வீட்டிலிருந்தோரையும் துப்பாக்கியால் தாக்க கூறிய அவர் , கெட்ட வார்த்தைகளால் பேசியதுடன் கணவனின் பெறாமகளின் தொலைபேசியை பறித்து நீ வீடியோ எடுக்கின்றாய் என தெரிவித்து தொலைபேசியை அடித்து உடைக்க முற்பட்டார்கள்.
அதேவேளை நிறைமாத கர்ப்பிணி என்றும் பார்க்காது தன்னை துப்பாக்கி காட்டி மிரட்டினார்கள். ஏன் கணவரை கைது செய்கின்றீர்கள் என நான் கேட்டபோதும் கணவனை தாக்கி சப்பாத்து கால்களால் தாக்கி இழுத்துகொண்டு வெளியே நின்ற முச்சக்கர வண்டிக்குள் ஏற்றியதுடன் அவரின் கண்களையும் கட்டிவிட்டு வழியிலே நாங்கள் இவரை கைது செய்துள்ளோம் என்று கூறினார்கள்.
அவரை சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கே சிறையில் அடைத்தார்கள். இந்நிலையில் நாம் அங்கு சென்று கைதுக்கான காரணத்தை விசாரித்தபோது அவர் மீது இதுவரை எவ்வித வழக்குகளும் போடவில்லை எனவும் சந்தேகத்தின் பேரிலேயே தடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
கடும் சித்திரைவதை
அடுத்த நாள் காலை மீண்டும் நாம் பொலிஸ் நிலையம் சென்ற போது அவரை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனயைடுத்து DGI பொலிஸ் நிலையத்திற்கு சென்று அங்கு இது தொடர்பில் முறையிட்டதை அடுத்து , DGI உடனடியாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொலைபேசியில் கேட்டார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலிருந்த எனது கணவரை முட்டுக்காலில் இருக்கவிட்டு உடலில் கடுமையாக தாக்கியதுடன் கோடாளியை வைத்து மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசினார்கள்.
பொலிஸாரின் கடுமையான தாக்குதலால் கணவனின் உடலில் கண்டல் காயங்கள் ஏற்பட்டதுடன் நடக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், உணவு உண்ண முடியாத நிலையில் நீர் ஆகாரங்களை மட்டுமே அருந்தி வருகின்றார்.
பாதிக்கப்பட்ட தனது கணவன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த பெண், இந்த சம்பவத்திற்கு எமக்கு நீதி வேண்டும். இனியும் எம்மால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுத்து கணவனுக்கான நீதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.