33 மனித எலும்புக்கூடுகள்; யாழ் செம்மணியை நோட்டமிடும் மர்ம வாகனம்?
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி பகுதியை மர்ம வாகனம் ஒன்று நோட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்றுவரை (ஜூன் 30) குறித்த புதைகுழியில் 33 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வாகனத்தில் வந்தது யார்?
இவ்வாறான சூழ்நிலையில் நேற்றுமுன்தினம் (29) மர்ம வாகனம் ஒன்று செம்மணியை நோட்டமிடுவதை அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் வாகனத்தில் வந்தது யார்? மயானத்தின் ஒழுங்கைக்குள் சென்று அகழ்வுப் பகுதியை ஏன் நோட்டமிட வேண்டும்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பல்வேறு வகையில் சித்திரவதைகள் செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தாய், சேய், சிறுவன் என பலரது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயமானது சர்வதேச ரீதியாகவும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்து.
இந்த நிலையில் இவ்வாறு மர்ம வாகனம் குறித்த பகுதியை நோட்டமிடுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.