இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இதனை பயன்படுத்த தடை!
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்சார சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எந்தக் காரணத்திற்காகவும் மின்சார சபையின் எந்தப் பணியாளரும் தனது அதிகாரப்பூர்வ அடையாளத்தையும் தகவலையும் சமூக ஊடகங்களுக்குப் பயன்படுத்த முடியாது.
மேலும், மின்சார சபையின், இரகசிய தகவல்களை வெளியிடுவது, தவறான அல்லது அரசியல் அவதூறு விடயங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது ஆகியவை ஒழுங்கு விதிகளின்படி கடுமையான குற்றமாகும்.
இதற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.