இண்டிகோ விமானம் மீது மோதிய கார்; விமான நிலையத்தில் அசம்பாவிதம்!
இந்தியா கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென நகர்ந்து வந்து விமானத்தின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரின் ஹேண்ட் பிரேக் செயலிழந்ததால் டிரைவர் இன்றியே நகரத் தொடங்கிய கார், விமானத்தின் மீது மோதிதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதில் எஞ்சின் பகுதியில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் மோதியதில் சேதமடைந்த இண்டிகோ நிறுவனத்தின் ஏ320 விமானம் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை விமானம் மீது மோதிய அந்தக் கார் உணவு கொண்டு செல்லும் வாகனம் என கூறப்படுகின்றது.