தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் உலகின் பெரிய எலிகள்
இலங்கைக்கும் செக் குடியரசுக்கும் இடையிலான விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஒரு ஜோடி ஆண் மற்றும் பெண் கேபிபரா எலிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த கேபிபரா எலிகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய கேபிபரா எலி தெற்காசிய நாடுகளில் வாழும் அரிய வகை விலங்கினங்களைச் சேர்ந்தது.
ஆனால் இலங்கைக்கு உரித்தான விலங்கு அல்ல. நன்கு வளர்ந்த கேபிபரா சுமார் நான்கு அடி உயரம் கொண்ட தாவர உண்ணி விலங்கு ஆகும்.
அதன் ஆயுட்காலம் சுமார் ஆறு ஆண்டுகள் ஆகும். குறித்த விலங்கு தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு கேபிபரா எலிகளின் தனிமைப்படுத்தல் காலம் முடிந்துவிட்டதாகவும், காட்சிப்படுத்தப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.