கனடாவில் காணாமல் போன இளம் தமிழ் யுவதி! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
கனடாவில் மாயமான தமிழ் யுவதி ஒருவரை கண்டறிய ரொறன்ரோ பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
மேலும் 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவரே இவ்வாறு மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த யுவதி கடைசியாக ஜனவரி 16 01-2022 அன்று இரவு 7:45 மணிக்கு ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில்,
மாயமான யுவதி நடுத்தர உடல், பழுப்பு நிற கண்கள், கருப்பு நேரான முடி மற்றும் நடுத்தர நிறம் என தெரிவித்துள்ள்னர்.
இந்த நிலையில், யுவதியின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யுவதி குறித்த தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் முறையில் அறிவிக்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
contact police at 416-808-3100, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477),