கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞர்! தீவிரமாக தேடும் பொலிஸார்
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளார்.
29 வயதான யோசாந்த் ஜெகதீஸ்வரன் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோ பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளனர்.
காணாமல் போன இளைஞன் இறுதியாக ஜனவரி 15-01-2022 அன்று மதியம் 12:10 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ட்ரெத்வீ டிரைவ் பகுதியில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் குட்டையான கருப்பு முடி, தாடி மற்றும் பழுப்பு நிற கண்களுடன் அவர் காணப்படுகிறார். கருப்பு நிற குளிர்கால ஜாக்கெட் அணிந்திருந்தார்.
குறித்த இளைஞர் கடைசியாக சிவப்பு நிற CFMK 918 என்ற உரிமத் தகடு கொண்ட சாம்பல் நிற டொயோட்டா கேம்ரியை ஓட்டிச் சென்றுள்ளார்.
காணாமல் போன இளைஞன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் முறைகள் ஊடாக தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
contact police at 416-808-3100, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477)