கனடா எல்லையில் பெரும் அதிர்ச்சி சம்பவம்: பரிதாபமாக உயிரிழந்த குடும்பம் (Photos)
கனடா எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம், கடந்த புதன்கிழமை, (19-01-2022) கனடா அமெரிக்க எல்லையில் உயிரிழந்த நிலையில் 4 நான்கு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் இந்தியாவிலுள்ள குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவர, அந்த பரபரப்பு இந்தியாவையும் தொற்றிக்கொண்டது. தற்போது, உயிரிழந்தவர்கள் குறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள், குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் ஆவர்.
இதேவேளை, சுமார் 65 இலட்ச ரூபாய் ஏஜண்டுகளுக்குக் கொடுத்து எப்படியாவது அமெரிக்கா செல்ல ஜகதீஷ் குடும்பம் முடிவு செய்துள்ளது.
இதேவேளை, ஜகதீஷ் குடும்பம் மாத்திரமின்றி, அதே கிராமத்தை சேர்ந்த வேறு பலரும், அமெரிக்கா செல்வதற்காக, கனடா சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் என்ன ஆனார்கள் என்பதும் இதுவரை தெரியவரவில்லை.
மேலும், ஜகதீஷ் குடும்பத்திலுள்ள, Dingucha கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே அமெரிக்காவிற்கு சென்று அங்கு வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் செட்டில் ஆவது, ஒரு தன்மானப் பிரச்சினையாக அக்கிராமத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது.
அதாவது, குடும்பத்தில் ஒருவராவது அமெரிக்காவில் செட்டில் ஆகவில்லை என்றால், அது குடும்பத்துக்கு அவமானம் என அக்கிராமத்தினர் கருதுகிறார்களாம்.
ஆகவேதான், எப்படியாவது அமெரிக்காவுக்கு சென்று செட்டில் ஆகிவிடுவது என புறப்பட்டிருக்கிறது ஜகதீஷ் குடும்பம். ஆனால், அமெரிக்காவில் செட்டில் ஆவதற்கு பதிலாக கனடா அமெரிக்க எல்லையிலேயே அவர்கள் குடும்பமாக உயிர் பிரிந்துள்ளது உண்மையாகவே பரிதாபமான விடயம்தான்!