பலரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்ட இலங்கையர்களின் உடல்கள்
கனடா , ஒட்டாவாவின் Barrhaven பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் மற்றும் அவர்களது நண்பரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதாக கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட 06 இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்று (17) பிற்பகல் ஒட்டாவாவில் இடம்பெற்றன. உயிரிழந்த இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது.
இறுதிச் சடங்கில் தந்தை தனுஷ்க விக்ரமசிங்க
இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு இரங்கல் குறிப்புகள் எழுதும் வாய்ப்பும் இருந்தது. அதேசமயம் இறுதி நிகழ்வில் உயிர் பிழைத்த இலங்கை குடும்பத்தின் தந்தை தனுஷ்க விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
கடந்த புதன்கிழமை, ஒட்டாவாவில் 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர் 6 இலங்கையர்களை கொலை செய்திருந்ததாக செய்திகள் வௌியாகின. பின்னர் சந்தேகநபரான இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.