இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் உயிரிழப்பு
தெல்தெனிய - திகனை நகரில் பணம் வட்டிக்கு வழங்கப்படும் நிறுவனம் ஒன்றை நடத்திச் சென்ற நபர் ஒருவர், இன்று (16) பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வர்த்தகர் உயிரிழப்பு
சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தொன் ரங்கஜீவ மங்கள குணவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வட்டிக்கு பணம் கொடுப்பதற்கு மேலதிகமாக வாகனங்களை வாடகைக்கு விடும் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் பல முகவர் நிலையங்களையும் நடத்திச் சென்றவர் எனவும் திகனை நகரிலுள்ள பல கட்டடங்கள் இவருக்குச் சொந்தமானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த நபருக்கு அருகிலிருந்து துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.