கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது பிரியந்த உடல்
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம், குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கனேமுல்ல பகுதியிலுள்ள மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த குமார தீவிரவாதக் கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
பிரியந்தவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்கள் அவரது இல்லத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
மத நிந்தனை செய்யப்பட்டதாக கூறி பிரியந்த குமார மிக கொடூரமான முறையில் பாகிஸ்தானில் கொல்லப்பட்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்பட்டுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.