நகரசபை உறுப்பினரின் வீட்டை உடைத்து கொள்ளை!
காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவருமான றஊப் அப்துல் மஜீதின் கடற்கரை வீதியிலுள்ள வீட்டை உடைத்து கொள்ளையிட்ட நபரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர்.
வீட்டை பூட்டிவிட்டு இரு தினங்களின் பின்னர் மீண்டும் வந்து திறந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவை உடைத்து கொள்ளையிடப்பட்டிருந்தது.
கொள்ளையிடப்பட்ட பொருட்கள் விற்பனை
அத்துடன் பெறுமதி மதிக்கமுடியாத வெண்கலத்திலான கழுகு சிலை மற்றும் மின்பிறப்பாகி என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களை கடையொன்றில விற்பனை செய்யப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைதான நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.