பொலிஸ் கான்ஸ்டபிள் இல்லத்தில் மீட்கப்பட்ட தோட்டாக்கள், கைக்குண்டுகள்
Sri Lanka Police
Anuradhapura
Crime
Gun Violence
By Viro
அனுராதபுரம் - கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் வளாகத்திலிருந்து 341 தோட்டாக்கள் மற்றும் 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் படி, குறித்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
281 T-56 தோட்டாக்கள், ஐந்து மெகசின்கள் மற்றும் 84 எஸ் துப்பாக்கிக்கான 06 தோட்டாக்கள் உட்பட பெருமளவான தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குறித்த பொலிஸ் அதிகாரி 2022 ஆம் ஆண்டு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US