புத்தர் பாிநிர்வாணம் அடைந்த புனித பூமி; இலங்கையிலிருந்து முதல் விமானம்
புத்த பெருமான் பாிநிர்வாணம் அடைந்ததாக கூறப்படும் இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மறுதினம் திறந்துவைக்கப்படவுள்ளது.
உத்தர மாநிலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடமான குஷி நகரானது பௌத்த வழிபாட்டு தலங்களைக் கொண்டமைந்துள்ளது. அத்துடன், அங்கே புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்த இடமாகவும் இது கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த விமான நிலைய திறப்பு விழாவிற்கு பல நாடுகளில் உள்ள பௌத்த தேரர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர். அந்தவகையில், 100 தேரர்களுடனான விமானமொன்று இலங்கையிலிருந்து குஷி நகர் விமான நிலையத்துக்கான முதலாவது விமானமாகப் புறப்படவுள்ளது.
இதேவேளை இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் முதலாவது விமானம் இலங்கையில் இருந்து பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது