பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரியான பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
லங்காபுர பிரதேச சபையின் தலைமை நிர்வாக அதிகாரி அடையாள தெரியாத நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
யமுனா பத்மினி என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்த அந்த அதிகாரி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அறையில் நபர் ஒருவர் இருப்பதைக் கண்டதாகவும் ஆனால் இருள் காரணமாக அவரை அடையாளம் காண முடியவில்லை என்றும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.