கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவரின் சகோதரரும் கொவிட்டால் உயிரிழப்பு
Srilanka
Dhammika Bandara
Covid19
Brother
By Sulokshi
கொரோனா தொற்றுக்கு மருந்து தயாரித்ததாக விளம்பரம் செய்த உடுமாகம ‘தம்மிக்க பண்டார’ எனப்படும் தனபால கங்கணம்கேவின் இளைய சகோதரர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த 12ஆம் திகதி இரவு தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
உயிரிழந்தவர் கேகாலை, ஹெட்டிமுல்ல, மகுர கனேகொடதென்ன பகுதியைச் சேர்ந்த 58 வயதான அப்புக்குட்டி கங்கனமலகே ஹீன் பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது இறுதிக் கிரியைகள் கேகாலை மயானத்தில் சுகாதார விதிகளின்படி மேற்கொள்ளப்பட்டன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US