கடலில் விழுந்த போர் விமானம்...தீவிர தேடுதல் பணியில் பிரிட்டன் படை
பிரிட்டனின் அதி நவீன போர் விமானமானது கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரிட்டனின் குயீன் எலிசபெத் விமானம் தாங்கி கப்பலில் இருந்து F 35 போர் விமானமானது வழக்கம் போல பயிற்சிக்காக மத்திய தரைக் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. அதன் பிறகு அந்த விமானமானது விபத்துக்குள்ளானது. அதிலும் இந்த விமானத்தை இயக்கிய விமானி பாராசூட் மூலம் குதித்து விமானம் தாங்கி கப்பலை பாதுகாப்பாக வந்து சேர்ந்தடைந்தார்.
இவ்விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார். இந்த அதிநவீன போர் விமானமானது ரேடாரின் கண்களுக்கு புலப்படாமல் பல்வேறு பணிகளை செய்யும் திறன் மிக்கது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான போர் விமானத்தில் எதிரிகளின் எல்லைகளை கண்காணிப்பதற்காக ரேடார் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் பல ராணுவ தொழில் நுட்பங்களும் இதில் பொருத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யாவிடம் சிக்கினால் நாட்டின் பல ராணுவ ரகசியங்கள் வெளியில் கசிந்துவிடும் என கூறப்படுகிறது. இது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இன்னலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அதிலும் எதிரிகளின் எல்லைக்குள் ரகசியமாக நுழையும் திறனும் உளவுத் தகவல்களை சேகரிக்கவும் தாக்குதல் தரவுகளை துல்லியமாக படமெடுத்து அனுப்பவும் இந்த விமானமானது பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த போர் விமானமானது ஈராக்கிலும், சிரியாவிலும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது பயன்படுத்தப்பட்ட்டது குறிப்பிடத்தக்கது.