தமிழர் பகுதியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை ; சிகையலங்கார நிலையத்தில் சம்பவம்
சிலாபம், கக்கப்பள்ளிய சந்தியில் உள்ள சிகையலங்கார நிலையமொன்றில் சிறுவன் ஒருவன் மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்த அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள்
கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சிலாபம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிகையலங்கார நிலையத்திற்கு முடி திருத்துவதற்காக வந்த சிறுவன் மீது இந்த துஷ்பிரயோக முயற்சி கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சிலாபம் பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதலில், கக்கப்பள்ளிய மற்றும் பண்டாரவத்தை ஆகிய பகுதிகளில் வைத்து இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழர் பகுதியில் சடலத்துடன் மீட்கப்பட்ட இளம் தாய் ; மற்றொரு பெண் அரங்கேற்றிய சினிமாவை மிஞ்சும் கொடூரம் அம்பலம்
கைது செய்யப்பட்டவர்கள் 54 மற்றும் 58 வயதுடைய கக்கப்பள்ளிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.