காலிமுகத்திடல் கடற்கரையில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!(Photos)
கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் 7 பேரில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களே இன்று குளிக்கச் சென்றுள்ளனர்.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்
இதன்போதே 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை பதாகை அகற்றப்பட்ட நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.