மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மார்ச் மாதத்திற்குள் பூஸ்டர் டோஸாக பைஷர் தடுப்பூசியை வழங்க தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிரேஷ்ட சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதத்திற்குள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முக்கிய நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸை வழங்க சுகாதார அமைச்சு தயாராகி வருகிறது.
அதன் பின்னர் இத்திட்டம் ஏனைய பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பதுடன் அதற்கு தேவையான பைஷர் தடுப்பூசிகளை கொள்வனவுச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாடு பற்றாக்குறையை எதிர்கொள்ளாது என்றும் சுகாதார நிபுணர்கள் உறுதியளித்துள்ளனர்.
பூஸ்டர் டோஸீனை பெறும் இளைஞர்கள் தங்கள் இரண்டாவது டோஸின் திகதியிலிருந்து ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே சமயம் முதியவர்கள் மற்றும் நோய் நிலைமை உள்ளவர்களுக்கு முன்னதாகவே பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.