காணாமல் போன இளைஞன் நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு! விசாரணையில் அதிர்ச்சி
கம்பளையில் மொத்த வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த இளைஞனின் சடலம் விக்டோரியா நீர்தேக்கத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கம்பளை, கஹட்டா பிட்டிய, பகுதியைச் சேர்ந் 21 வயதுடைய மொஹமட் ஹசன் ராஷிக் என்பவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் கடந்த 6 வருடமாக குறித்த கடையில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கம்பளை பகுதியில் கடையின் மொத்த வியாபாரிக்கு சொந்தமான மற்றுமொரு களஞ்சியசாலை ஒன்றும் உள்ளதோடு அந்த மொத்த வியாபாரியிடம் மோசடி செய்ததாக கூறி உயிரிழந்த இளைஞரை கடையின் உரிமையாளரும் அவரது மகனும் பலருடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட நாளிலிருந்து இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், மறுநாள் அவர் வீட்டிற்கு செல்லாததால் கடந்த 22ஆம் திகதி இளைஞனின் தாயார் நடந்த விடயங்களைக் கூறி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், பொலிஸாரி்ல் இருந்து எந்த தகவலும் இல்லாததால் 25ஆம் திகதி மீண்டும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் விக்டோரியா நீர்தேக்கத்தில் இருந்து குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கம்பளையிலிருந்து இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு 40 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் உள்ளதால் குறித்த இளைஞன் அங்கு செல்ல வாய்ப்பில்லை என இளைஞனின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.