பெட்டியை எடுத்துகொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்? குழப்பத்தில் ரசிகர்கள்
தமிழகத்தில் உள்ள பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) ஆக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் கோலகலமாக தொடங்கி 94 நாட்கள் முடிந்துள்ள நிலையில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் Ticket To Finale டாஸ்க்கில் ஆமிர் வெற்றி பெற்ற நிலையில் இந்த வாரம் மீதம் உள்ள 6 போட்டியாளர்கள் நமினேஷன் பட்டியலில் உள்ளனர். நேற்று முன்தினம் நடிகர் சரத்குமார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து 3,00,000 மதிப்புள்ள பணதொகையுடைய பெட்டியை வைத்து விட்டு சென்றுள்ளார்.
இதுவரையில் அந்த பெட்டியை எடுத்துகொண்டு யாரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலையில் தற்போது அந்த பெட்டியில் இருக்கும் பணதொகையின் மதிப்பு 9,00,000 மாக உயர்ந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 முடிவுபெற இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் இந்த பணதொகையுடைய பேட்டியை யார் எடுத்துகொண்டு வெளியே செல்லபோகிறார்கள் என்று பார்ப்பதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதேவேளை, போட்டியாளரான நீருப், இந்த பண பெட்டியை எடுத்துகொண்டு வெளியே செல்வதாக பிக்பாஸ் வீட்டில் கூறியுள்ளார். இதேவேளை சக பேட்டியாளரான பிரியங்காவும் எடுத்து செல்ல போவதாக கூறியுள்ள நிலையில் யார் இதை எடுத்து செல்ல போகிறார்கள் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.