ஹோட்டல் அறையில் பெண்ணுடன் பிடிபட்ட பிக்கு!
தியதலாவ பிரதேசத்தில் ஹோட்டல் அறை ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயதான பௌத்த பிக்கு, 40 வயதான பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் பிக்குவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான பிக்கு பொரளந்த பகுதியில் அமைந்துள்ள விஹாரையொன்றைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிக்குவுடன் தங்கியிருந்த பெண் திருமணமானவர் என தெரிவித்த பொலிஸார், பெண் ஒருவருடன் பௌத்த பிக்கு ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பிக்குவை கைது செய்ததாகவும் தெரிவித்தனர்.