தீபாவளிக்கு பிறகு இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகும் நன்மைகள்!
அதன்படி இன்று நவராத்திரி தொடங்கிவிட்டது, விஜயதசமி அக்டோபர் 5 ஆம் திகதியும், அதன் பிறகு அக்டோபர் 24-ம் திகதி தீபாவளியும் கொண்டாடப்படும்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு முக்கியமான கிரகப் பெயர்ச்சியும் நடக்கப் போகிறது. அதன்படி அக்டோபர் 26-ம் திகதி 2022 அன்று, புதன் கிரகம் பெயர்ந்து துலாம் ராசிக்குள் நுழைகிறது.
இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தருவதோடு, பல பிரச்சனைகளிலிருந்தும் விடுபட உதவும். இதனுடன், லட்சுமி தேவியின் அருளும் கிடைக்கும். எனவே தீபாவளிக்கு பிறகு புதனின் ராசி மாற்றம் எந்தெந்த நபர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.
தீபாவளிகக்கு பிறகு இந்த ராசிக்காரர்களுக்கு உண்டாகும் நன்மை
மிதுனம்: தீபாவளிக்கு பிறகு புதன் சஞ்சாரம் செய்வதால் மிதுன ராசிக்காரர்களின் பழைய பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பண வரவு சாதகமாக அமையும்.'
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் நன்மை தரும். அவர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். பணப்பற்றாக்குறையாக இருந்தவர்களின் நிதி தொல்லை முற்றிலும் நீங்கும். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்கள் ஆதாயமடைவார்கள். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் குடும்ப மகிழ்ச்சியைத் தரும். உறவுமுறைகள் நன்றாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். நீங்கள் எங்கிருந்தாவது பணம் பெறலாம். வேலையில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
தனுசு: துலாம் ராசியில் புதன் நுழைவதால் தனுசு ராசிக்காரர்களின் பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். பிடிபட்ட பணத்தைக் காணலாம். தடைப்பட்ட திட்டங்கள் இப்போது இயங்கும். உங்கள் பணி சிறப்பாக நடக்கும். பாராட்டு பெறுவீர்கள்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் தொழில் பலன்களைத் தரும். முன்னேற்றம் அடைய முடியும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும்.