மரவள்ளி கிழங்கு பறிக்க சென்றவருகு நேர்ந்த சோகம்
வவுனியா நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் மரவள்ளி கிழங்குகளை பறிக்க சென்ற முதியவர் விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து இன்று காலை 5 மணியளவில் மரவள்ளி கிழங்குகளை பறிப்பதற்காக அருகில் உள்ள தோட்டக்காணிக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் குறித்த முதியவர் வீட்டிற்கு வராத நிலையில் அவரது மனைவி அவரை தேடியுள்ளார். இதன்போது அவரது தோட்டக்காணியில் முதியவர் சடலமாக கிடந்தமை அவதானிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் நொச்சிமோட்டை பகுதியைசேர்ந்த துரைச்சாமி சுப்பிரமணியம் வயது 69 என்ற முதியவரே மரணமடைந்துள்ளார்.