நாட்டை விட்டு வெளியேறிவிட்டாரா பசில்!
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று காலை அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, 2023 ஜனவரி 15ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் அண்மையில் அனுமதியளித்திருந்தது.
ஐவர்கொண்ட நீதியரசர்கள் குழு அனுமதி
மருத்துவ சிகிச்சை மற்றும் தனிப்பட்ட காரணங்களால், அமெரிக்காவுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளமையால், அதற்காக அனுமதி வழங்குமாறு, பசில் ராஜபக்ஷ சார்பில் உயர்நீதிமன்றில் முன்னிலையாகிருந்த சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.
இதனைப் பரிசீலனைக்கு எடுத்த பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐவர்கொண்ட நீதியரசர்கள் குழு , பெசில் ராஜபக்ஷவுக்கு, வெளிநாடு செல்ல அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.