மதுபானசாலைகள் திறப்பு தொடர்பில் வெளியான தகவல்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் நாளை (12.11.2023) ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தீபாவளி தினத்தன்று மூடுவதற்கு இலங்கை மதுவரி திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும் நேற்று (10.11.2023) மாலை வரை அமைதி காத்த கலால் திணைக்களம், நுவரெலியா மாவட்ட மதுபானசாலைகளை மாத்திரம் மூடுவதற்கு அனுமதி வழங்கிவிட்டு, பதுளை மாவட்டத்துக்கான அனுமதியை மறுத்தது.
ஜனாதிபதியின் அறிவிப்பு
இது குறித்து இன்று (11.11.2023) காலை ஜனாதிபதியிடம் கவனத்துக்கு கொண்டுசென்ற பின்னர் பதுளை மாவட்ட மதுபானசாலைகளை நாளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கலால் திணைக்களத்துக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதன்படி பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை தவிர்த்து, மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளின், மதுபான வகைகள் விற்பனை செய்யும் நிலையங்களை, தீபாவளிப் பண்டிகை தினத்தன்று மூடப்படவுள்ளது என்றார்.