பிரித்தானியாவில் வங்கிக் கணக்கில் இருந்து பல கோடி ரூபாயை திருடிய ஊழியர்!
பிரித்தானியாவில் உள்ள வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 900,000 பவுண்களை (இலங்கை மதிப்பில் சுமார் 40 கோடி ரூபா) எடுத்தமைக்காக முன்னாள் வங்கி ஊழியர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
30 வயதான ஹம்சா இசாக், 2016 மற்றும் 2018 க்கு இடையில் ஹெச்எஸ்பிசியின் லீசெஸ்டர் கிளையில் பணிபுரியும் போது கணக்கு விபரங்களை மாற்றியுள்ளார்.
இசாக்கின் உதவியுடனும் தந்திர அறிவுடனும் ஏனைய கணக்குகளில் மொத்தம் 896,645.05 பவுண்கள் (இலங்கை மதிப்பில் 39கோடியே 55 லட்சத்து 96 ஆயிரத்து 254 ரூபா) வைப்பில் இடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசடி மற்றும் கணினி தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவருக்கு, 5 ஆண்டுகளும் எட்டு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு லெய்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் பதவியை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம் மோசடியில் ஈடுபட்டமை மற்றும் கணினியை தவறாகப் பயன்படுத்திய சட்டத்தின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளை இசாக் ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட மூன்று நைஜீரியர்களும், பிரித்தானியாவில் பரிவர்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களது சொந்த நாட்டில் இருந்துள்ளனர்.
இரண்டு சந்தர்ப்பங்களில் அடையாளம் தெரியாத சந்தேகநபர்கள் லெய்செஸ்டர் கிளைக்குள் நுழைந்து ஏனைய ஊழியர்களைத் தவிர்த்து நேரடியாக பிரதிவாதியிடம் சென்றதை வங்கியின் விசாரணையில் தெரியவந்துள்ளது.