கடற்பகுதியில் நின்றுகொண்டிருந்த படகில் பொலிஸார் கண்ட மர்மபொருள்
ஆஸ்திரேலியாவில் ராட்னெஸ்ட் தீவுக்கு அருகே உள்ள ப்ரீமண்ட் கடற்பகுதியில் படகு ஒன்று நின்று கொண்டிருந்த நிலையில் கடலோர பொலிஸார் அங்கு சென்று விசாரித்தனர்.
இதன்போது, என்ஜின் பழுதாகி இருப்பதால் படகு இங்கு நின்று கொண்டிருப்பதாக படகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் மீது சந்தேகமடைந்த பொலிஸார் அந்த படகில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் சுமார் 30 பைகள் காணப்பட்டன.
அதனை பிரித்து பார்த்தபோது 800 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் படகில் இருந்த 2 இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் விசாரணையில் கைதுசெய்யப்பட்டவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிட்னி விமான நிலையத்தில் வெளிநாட்டுக்கு புறப்பட தயாராக இருந்த மற்றொரு இளைஞனையும் பொலிஸார் கைது செய்தனர்.