வெளிநாடொன்றில் முதல் ஓமிக்ரோன் மரணம் பதிவு!
ஆஸ்திரேலியாவில் ஓமிக்ரோன் வைரஸ் தொற்றால் நபரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் முதல் மரணமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில், முதன்முறையாக Omicron பாதிப்புக்கு இன்று (27-12-2021) திங்கட்கிழமை உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளபோதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கும் விகிதங்கள் தொடர்ந்து குறைவாக உள்ளன என கூறி புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்காமல் விட்டு விட்டனர்.
Omicron தொற்றால் உயிரிழந்த நபருக்கு 80 வயது என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், முதியோர் நல மையத்தில் தங்கியிருந்தபோது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.