உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தும் பெருங்காய சாறு! செய்வது எப்படி?
பெருங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. இதற்கு உடலில் உள்ள பல பிரச்சனைகளை போக்கக்கூடிய சக்தி உள்ளது.
பெருங்காயத்தை சாறு வடிவில் எடுத்து கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும்.
பெருங்காய சாறு செய்வது எப்படி?
பெருங்காய தண்ணீர் தயாரிக்க, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும்.
அதில் அரை டீஸ்பூன் பெருங்காயத்தை கலந்தால் பெருங்காய சாறு தயாராகிவிடும்.
இதன் நன்மைகள் என்னென்ன?
பெருங்காயம் கலந்த நீரை தினமும் குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் நீங்கும். பெருங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் உள்ளிட்ட சில கொழுப்புகளின் உயர் இரத்த அளவுகளில் இருந்து பாதுகாக்கும்.
கண்களில் குறைபாடு உள்ளவர்கள் பெருங்காயத் நீரினை அருந்துவதன் மூலமாக அந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
பற்களை வலுப்படுத்தவும் இது பயன்படுகிறது.