சமூக ஊடகங்கள் மூலம் மக்களின் வெறுப்புணர்வை தூண்ட முயன்ற நபர் கைது
சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை ஏற்படுத்திய உரையை பதிவிட்ட ஒருவரை நாகொட பொலிஸார் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
பொவிட்டியமுல்ல தலாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைக் கொல்லுமாறு சமூக ஊடகங்களில் சந்தேக நபர் வெறுப்பூட்டும் உரையை வெளியிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் மனைவியை பிரிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் நாகொட பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிக்க டயஸ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உடுகம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.