யாழ் நகரில் கிருமி நீக்கும் பணியில் இராணுவத்தினர்
யாழ் மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக யாழ் நகரப் பகுதியில் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு இன்றுகாலை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது .
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் , இராணுவத்தின் 512வது பிரிகெட் இராணுவத்தினரால் யாழ்ப்பாண நகரப் பகுதி நீர் ஊற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி யாழ் நகரில் பொதுமக்கள் அதிகமாக ஒன்றுகூடும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதி ஆகிய வீதிகள் இராணுவத்தினரால் சுத்தம் செய்யப்பட்டு மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.