அதிசொகுசு ஜெட் விமானத்தில் வந்திறங்கிய அநுர; எழுந்த சர்ச்சை
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , வியட்நாமுக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நேற்று சிறப்பு விமானத்தில் நாடு திரும்பினார்.
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன்அழைப்பின் பேரில் ஜனாதிபதி , ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
செலவழித்தது யார்?
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , நேற்று பிற்பகல் வியட்நாம் அரசாங்கத்தின் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பினார்.
அதிசொகுசு ஜெட் விமானமான Embraer Legacy 600 மூலம் ஜனாதிபதி பயணித்தது என்ன அடிப்படையில் அதற்கு செலவளித்தது யார் எனநெட்டிசன்கள் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் தேர்தல் வாக்களிப்புக்கு வரவேண்டி இருந்ததால் ஜனாதிபதிக்கான இந்த விமானத்தை வியட்னாம் அரசே ஒழுங்குபடுத்தி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு ஜனாதிபதி அவரின் நிதியை பெற்றோ அல்லது அரச பணத்தை செலவிட்டோ இந்த விமானத்தை பயன்படுத்தவில்லை என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறிப்பிட்டுள்ளன.