இக்கட்டான சூழ்நிலையில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு மேலுமொரு நெருக்கடி!
கோட்டாபய ராஜக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜக்ஷ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினரான ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (18-03-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய போக்கு தொடர்ந்தால் குடிமக்கள் அவர்களை பதவிகளில் இருந்து நீக்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் சுயாதீன அமைப்பாக இலங்கை மத்திய வங்கி மீண்டும் மாற வேண்டும்.
தற்போது மத்திய வங்கியானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முகவர் அல்லது கிளை போன்று செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளாந்தம் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டும் காணாத வகையில் தற்போதைய நிர்வாகம் தன்னிச்சையாக செயற்படுவது வருந்தத்தக்கது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.