இலங்கையில் மேலும் 74 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி 48 ஆண்களும் 26 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் நாட்டில் இதுவைஅ உயிரிழந்தோர் எண்ணிகை 4,645 பேராக அதிகரித்துள்ளது.
இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 315,175ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,902 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 282,770 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் தொற்றுக்குள்ளான 27,834 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றதாகவும் கூறப்படுகின்றது.