நம் சந்ததியினருக்கும் அன்னதோஷம் என்பதே ஏற்படாமல் தடுக்க அன்னபூரணியை இவ்வாறு வழிபடுங்கள்
சமையலறையில் நாம் செய்யும் ஒரு சில மாற்றங்கள் நமக்கும் நம் சந்ததியினருக்கும் அன்னதோஷம் என்பதே ஏற்படாமல் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
சிலர் வறுமையின் காரணமாக சாப்பாட்டிற்கு வழியில்லாமல் துன்பப்படுவார்கள் அது ஒரு வகை. ஒரு சிலரிடம் எல்லாமும் இருக்கும் ஆனால் அவர்களால் எதையும் சாப்பிட முடியாது.அல்லது சாப்பிடக் கூடாத வியாதிகள் வந்து கொண்டே இருக்கும்.
இப்படியான இந்த தோஷத்தை நீக்க சமையலறையில் நாம் செய்யும் இந்த ஒரு மாறுதல் அனைத்தையும் சரி செய்யும் என்று சொல்லப்படுகிறது.
அன்னபூரணி தாயார் வழிபாடு
இந்த அன்னதோஷத்தை நீக்க அன்னத்திற்கெல்லாம் தாயான அன்னபூரணி தாயாரை நாம் வழிபட வேண்டும்.
எவ்வாறு வழிபட வேண்டும்
அன்னபூரணி தாயாரை வழிபட வேண்டும் என்றால் அவர்களை நாம் பூஜை அறையில் வைத்து வழிபடுவோம். அப்படி வழிபடுவதை விட சிறப்பு நாம் சமைக்கும் இடத்தில் அவர்களை வைத்து வழிபடுவது.
சமையலறையில் அவர்களை வைத்து வழிபடுவது என்றால் அப்படியே எடுத்துக் கொண்டு போய் வைத்து விடுவது அல்ல அவர்களை சமையலறையில் நாம் சமைக்கும் பொழுது நம்முடைய முகம் அவர்களைப் பார்த்தபடி வைக்க வேண்டும்.
அப்படி வைத்து தினமும் காலையில் சமையல் வேலை தொடங்கும் முன்பு அன்னபூரணி தாயாருக்கு விளக்கு ஏற்றி வணங்கிய பிறகு வேலையை தொடங்க வேண்டும்.
நெய்வேத்திய
சாதம் வடித்த உடன் கொஞ்சம் சாதத்தை நெய் கலந்து தாயாருக்கு நெய்வேத்தியமாக படைத்து வந்தால் குடும்பம் என்றென்றைக்கும் வறுமை என்ற வார்த்தைக்கு வழியில்லாமல் வாழும்.
பொதுவாக அன்னபூரணி தாயார் எந்த திசையில் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் நாம் அவரை பார்த்த படி நின்று சமைக்கும் போது மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.
எவ்வாறு அன்னபூரணி விக்கிரகம் அமைய வேண்டும்
அன்னபூரணி படம் இருந்தால் அவர்களை அப்படியே வைத்து வணங்கலாம். அன்னபூரணி விக்கிரகங்களை வைத்து வணங்கும் போது தாயாரின் கையில் கரண்டி இருப்பது போல் வைக்க வேண்டும்.
தாயாரின் கையில் கரண்டி இல்லாமல் இருக்கும் விக்கிரகத்தை வைத்து வணங்கவே கூடாது. அது மட்டும் இன்றி அந்த கரண்டி உடைந்து இருந்தாலும் அல்லது சேதம் அடைந்திருந்தாலும் அப்படியே வைத்து வணங்குவதும் நல்லதல்ல.
எவ்வாறு வைக்க வேண்டும்
இது மட்டும் இன்றி பெரும்பாலும் பச்சரிசியின் மேல் அன்னபூரணி தாயாரின் சிலையை வைத்து இருப்பார்கள்.
அப்படி வைக்காமல் அரிசி உள்ளே சிறிது அழுத்தி இருக்கும்படி வைக்க வேண்டும். அரிசியை விட நெல் வைத்து அதன் மேல் அவர்களை வைத்து வழிபடுவது மிகவும் விசேஷமானது.
அரிசி நெல் இவற்றில் ஒரு ரூபாய் நாணயமாவது போட்டு வைக்கும் பொழுது இது குடும்பத்திற்கு மேலும் சுபிக்சத்தை உண்டாகும்.
எவ்வாறு வைக்க வேண்டும்
அன்னபூரணி தாயாரை இப்படி ஏதாவது ஒரு தானியத்தின் மேல் அமர வைக்க வேண்டும் தனியாக வைக்க கூடாது.
சமையல் அறையில் அசைவம் சமைக்கும் நேரங்களில் மட்டும் தாயாரின் படத்தை மறைத்து விட வேண்டும்.
அன்னபூரணி என்றால் சாதத்திற்கு பிரதானமானவர்கள் என்று அர்த்தம். அது மட்டும் இன்றி சமையலறையில் அன்னபூரணி தாயாரை வைத்து வணங்கும் போது அடுப்பின் அனல் அவர்களின் மேல் படும்படியும் வைக்கக் கூடாது.
எங்கு இருக்க கூடாது
திசை நம்மை பார்த்தபடி இருக்க வேண்டுமே தவிர நெருப்பின் அருகே இருக்கக் கூடாது என்று கூறப்படுகிறது.
இந்த ஒரு சின்ன மாறுதலை செய்து அன்னபூரணி தாயாரை வழிபட்டு வந்தால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் அன்னதோஷம் என்பது ஏற்படாது என்று சொல்லப்படுகிறது.
மனிதனின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறைவிடத்தில் கூட, உணவிற்கு தான் அதிக முக்கியதுவம். அப்படியான அன்னத்திற்கே தோஷம் ஏற்பட்டு, நாம் படும் துன்பத்தை இந்த வழிகளில் தவிர்த்து விடலாம் என்று கூறப்படுகிறது.