ஜேர்மனியில் முடிவுக்கு வருகிறது ஏஞ்சலா மெர்க்கலின் 16 ஆண்டு கால ஆட்சி!
ஜேர்மனியில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் ஏஞ்சலா மெர்க்கலின் கீழ் 16 வருடங்கள் ஆட்சி செய்துவந்த பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வருகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கலின் (angela merkel)சிடியு/சிஎஸ்யு பழமைவாதக் கூட்டணிக்கு 24.5 சதவீதம் வாக்குகளுடன் 194 இடங்களை கைப்பற்றிய நிலையில், மத்திய-இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 26.0 சதவீதம் வாக்குகளுடன் 205 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
அத்துடன் , பசுமை அரசியல் கட்சி 116 இடங்கள், ஃபடிபி 91 இடங்கள், ஏஃபடி 84 இடங்கள், இடது கட்சி 39 இடங்கள் மற்றும் இதர கட்சிகள் 1 இடத்தையம் கைப்பற்றின. சோஷியல் டெமாக்ரடிக் கட்சி கடந்த 2017 பொதுத்தேர்தலில் போது, 20.5 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், தற்போது கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது.
தற்போது ஏதேனும் ஒரு கட்சி பெரும்பான்மையை பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணியை அமைக்கவேண்டும்.
இந்த கூட்டணிகள் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குள் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஜெர்மனியின் அடுத்த பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் , சோஷியல் டெமாக்ரடிக் கட்சி சார்பாக பதவிர்க்கப்படும் நான்காவது சான்செலராக ஸ்கோல்ஸ் இருப்பார்.
இதற்கிடையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஏஞ்சலா மெர்க்கலின் (angela merkel),
“தேர்தலில் முதலிடத்தை பிடித்த கட்சியில் இருந்துதான் எப்போதும் பிரதமர் தேர்தெடுக்கப்படுவார் என்பது அல்ல, என்னை பொறுத்தவரை, ஒவ்வொரு கூட்டணி கட்சியும் சம்பந்தப்பட்ட, அனைவரும் வெளிப்படையாக காணக்கூடிய ஒரு அரசாங்கத்தை நான் விரும்புகிறேன் - வெறும் பிரதமர் மட்டும் பிரகாசிக்கக்கூடிய ஒரு அரசாங்கமாக இருக்கக்கூடாது என அவர் கூறினார்.