புத்தக பையில் அழையா விருந்தாளி; அலறியடித்த மாணவர்கள்
ஹிங்குராக்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியொருவரின் புத்தகப் பைக்குள் விஷப்பாம்பொன்று இருந்ததில் வகுப்பு மாணவர்கள் அலறியடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் புதன்கிழமை (13) காலை பாடசாலைக்கு வருகை தந்திருந்த மாணவி புத்தகத்தை எடுப்பதற்காக புத்தகப் பைக்குள் கையை விட்ட வேளை ஏதோவொன்று அசைவதாக உணர்ந்த மாணவி சத்தமிட்டவாறு வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளார்.
விடயமறிந்த பாடசாலை அதிபரும்,ஆசிரியர்களும் அந்த மாணவியின் புத்தகப் பையை வகுப்பறையை விட்டு வெளியே எடுத்து பார்க்கையில் அதனுள் கறுப்பு நிற விஷப்பாம்பொன்று இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து பாடசாலையில் பணிப்புரிவோரின் உதவியுடன் பாம்பை விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.