தாய் தந்தையுடன் சென்ற சுருவனுக்கு நேர்ந்த துயரம்'
வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 8 வயதும் இரண்டு மாதமுமான சிறுவன் உயிரிழந்துள்ளான். முச்சக்கரவண்டியும் ரிப்பரும் மோதிக்கொண்டபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து காட்சிகள் அந்த பிரதேசத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளன.
விபத்தின்போது முச்சக்கரவண்டியில் பயணித்த தாய், தந்தை அவரது பிள்ளை காயமடைந்ததையடுத்து மூவரும் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இதன் போது சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் ரிப்பர் வாகன சாரதி வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .